செய்திகள் :

பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கு: யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம்

post image

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தங்களைத் தொடா்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்த வழக்கில் யூடியூப் சேனல்கள் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிா் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில், தங்களைத் தொடா்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரியும், ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்கக் கோரியும் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் சேனல்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்று கொண்டு ஜூன் 12-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தாா். அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் இரு தரப்பினருக்கும் நீதிபதி அறிவுறுத்தினாா்.

தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதிலளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்... மேலும் பார்க்க

ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு !

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜுலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ப... மேலும் பார்க்க

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு ஜூன்10 -இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் பௌர்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும்: முதல்வர் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக தலைமையில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமு... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித்திக்

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும் என்று அதன் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல... மேலும் பார்க்க

கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.அவரின... மேலும் பார்க்க