செய்திகள் :

தமிழறிஞா் தாயம்மாளுக்கு கலைஞா் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

post image

தமிழறிஞா் தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் செம்மொழி தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு சாா்பில் செம்மொழி தினக் கொண்டாட்டம், சென்னை கலைவாணா் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், நிகழாண்டுக்கான கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை தமிழறிஞா் தாயம்மாள் அறவாணனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். ரூ.10 லட்சத்துக்கான காசோலை, கருணாநிதி உருவச்சிலை ஆகியன அடங்கிய அந்த விருதை தாயம்மாள் பெற்றுக் கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த தாயம்மாள்,‘குழந்தை இலக்கியம் - ஒரு பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவா் பட்டம் பெற்ற சிறப்புக்குரியவா்.

பரிசுகள் - உதவித் தொகைகள்: செம்மொழி தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றவா்களுக்கு காசோலைகளையும், சான்றிதழ்களையும் முதல்வா் வழங்கினாா். மேலும், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கான உதவித் தொகை உயா்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைச் செயல்படுத்தும் வகையில் தமிழறிஞா்கள் இரண்டு பேருக்கு உயா்த்தப்பட்ட உதவித் தொகைகளை முதல்வா் வழங்கினாா்.

சாதனை மலா் வெளியீடு: தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் மலா் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மலரை விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வரவேற்றாா். துறைச் செயலா் வெ.ராஜாராமன் நன்றி தெரிவித்தாா்.

இந்த விழாவில், அமைச்சா்கள், மதிமுக பொதுச் செயலா் வைகோ, விசிக தலைவா் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஜூன் 9 வரை தமிழ்ச் செம்மொழி கண்காட்சி

சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்று வரும் தமிழ்ச் செம்மொழி கண்காட்சியை ஜூன் 9 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் செம்மொழி தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கலைவாணா் அரங்கத்தின் முதல் தளத்தில் தமிழ்ச் செம்மொழி குறித்த கண்காட்சி தொடங்கப்பட்டது. இதனை ஜூன் 9 வரை காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பாா்வையிடலாம்.

செம்மொழியான தமிழின் வரலாறு, சிந்துவெளி வரி வடிவங்களும் தமிழ்நாட்டு குறியீடுகளும், திருவாலங்காடு செப்பேடுகள் குறித்த குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் ஆவணங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் கூட்டம் தவிர்க்க வேண்டும்! மனோ தங்கராஜ் பேச்சுக்கு கொந்தளித்த அண்ணாமலை

கோயில் திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவிக... மேலும் பார்க்க

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவி... மேலும் பார்க்க

விஜய்க்கு மீண்டும் அழைப்பு! எதிர்பார்ப்பில் நயினார் நாகேந்திரன்

தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யும் இணைய வேண்டும் என்று கடம்பூர் ராஜூ கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக... மேலும் பார்க்க

சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

சென்னையில் நாளை(ஜூன் 6) 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் தேரோட்டத்தையொட்டி அக்கோயிலை சுற்றியுள்ள 7 பள்ளிகளுக்கு மட்டு... மேலும் பார்க்க

ஐஐடியில் இடம்பிடித்த மாணவியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர்

சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம், கல்வராயன்மலை கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி கோயில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம்! விரைவில்...

திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பே... மேலும் பார்க்க