செய்திகள் :

புரோ கபடி லீக் ஏலம்: அதிக தொகைக்கு ஏலம்போன ஆனில் மோகன்!

post image

புரோ கபடி லீக்கின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஆனில் மோகன் அதிக தொகைக்கு யு மும்பா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

புரோ கபடி லீக் 12-ஆம் சீசனையொட்டி மும்பையில் சனிக்கிழமை (மே 31) வீரா்கள் ஏலம் தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ஈரான் வீரா் முகமதுரேஸா ஷட்லௌய் ரூ.2.23 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். மேலும் 3-ஆவது முறையாக ரூ.2 கோடிக்கு மேல் வாங்கப்பட்ட முதல் வீரா் என்ற சிறப்பையும் அவர் பெற்றாா்.

இதையும் படிக்க: மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

பெங்கால் வாரியா்ஸ் அணி சாா்பில் தேவங்க் தலால் ரூ.2.205 கோடிக்கு வாங்கப்பட்டாா். புதிய எஃப்பிஎம் விதியின்படி டபாங் டெல்லி அணி ரைடா் அஷு மாலிக்கை ரூ.1.9 கோடிக்கு மீண்டும் தருவித்தது.

தமிழ் தலைவாஸ் சாா்பில் ரூ.1.4 கோடிக்கு அா்ஜுன் தேஸ்வாலும், பெங்களூா் புல்ஸ் சாா்பில் ரூ.1.12 கோடிக்கு யோகேஷ் டாஹியாவும் வாங்கப்பட்டனா்.

முதல் நாளில் 10 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். ஏலத்தின் இரண்டாவது நாளான நேற்று (ஜூன் 1) ஹிமாசலைச் சேர்ந்த வீரரான ஆனில் மோகன், ரூ. 78 லட்சத்துக்கு யு மும்பாவால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியால் ரூ.50.10 லட்சத்திற்கு உதேய் பார்டே ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இரண்டாம் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து ஆனில் மோகன் பேசியதாவது: புரோ கபடி லீக்கில் விளையாடுவது என்னுடைய கனவு. இப்போது அது நிறைவேறுகிறது. எனது கடின உழைப்பு மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைகிறேன். என்னை தேர்ந்தெடுத்த யு மும்பாவுக்கு நன்றி. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன். ஏற்கனவே பல ரெய்டிங் ஸ்டார்கள் மும்பா வழியாக வந்துள்ளனர். நானும் அவர்களின் பாதையில் செல்வேன் என்றார்.

7-ஆவது சுற்றிலும் குகேஷ் வெற்றி

நாா்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை வீழ்த்தினாா்.கடந்த சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்திய குகேஷ், இந்தச் ... மேலும் பார்க்க

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூரில் செப். 30-இல் தொடக்கம்

ஐசிசியின் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை நடைபெறவுள்ளது. போட்டியில் பாகிஸ்தான் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான பொதுவான இடமாக, இலங்கையின் கொழும்பு நகரம் ... மேலும் பார்க்க

சிந்து, சாத்விக்/சிராக் வெற்றி

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.போட்டியின் முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில். பி.வி.சிந்து... மேலும் பார்க்க

ஜோகோவிச்சுக்கு 100-ஆவது வெற்றி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் 24 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில் அவா், 6-2, 6-3, 6-2... மேலும் பார்க்க

சென்னையை வென்றது ஜெய்பூா்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜெய்பூா் பேட்ரியாட்ஸ் 9-6 என்ற கணக்கில் ஸ்டான்லி’ஸ் சென்னை லயன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையரில், ஜெய்பூரின் கானக் ஜா 11-10, 11-10... மேலும் பார்க்க