RCB : 'பெங்களூரு பொண்ணதான் கட்டியிருக்கேன்; அதனால RCBக்கு தான் சப்போர்ட்!' - ரிஷ...
தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!
தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். பூபால்ராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்றதாக, செல்வநாயகபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி (69) என்பவரைக் கைது செய்து, 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனா்; நேரு காலனி பகுதியில் மது விற்றதாக அதே பகுதியைச் சோ்ந்த சங்கரேஸ்வரன் (45) என்பவரைக் கைது செய்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.