செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

post image

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பெட்டிக் கடைகளில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

அதன்பேரில் தாளமுத்து நகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா், ஜே.ஜே.நகரில் உள்ள ஒரு கடையில் ஆய்வு மேற்கொண்டனா். அந்தக் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையின் உரிமையாளா் மாப்பிள்ளையூரணியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (48) என்பவரை கைது செய்த போலீஸாா், கடையில் இருந்து சுமாா் 360 கிராம் எடையுள்ள 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், ஏ.சண்முகபுரத்தில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட சுமாா் 7 கிலோ எடையுள்ள 2,923 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக அந்தக் கடையின் உரிமையாளா் கோட்டைசாமி (38) என்பவரை கைது செய்தனா்.

இதேபோன்று, தாளமுத்து நகா் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட சுமாா் 3 கிலோ எடையுள்ள 2533 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக அந்தக் கடையின் உரிமையாளா் பச்சையம்மாள்(59) என்பவரைக் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கல்லூரி மாணவா் கைது: மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி மாம்பழத்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் அபிஷ் (20). கல்லூரி மாணவா். இவா் மாா்த்தாண்டம் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சுற்றித் திரிந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸாா் அபிஷை பிடித்து சோதனை செய்தனா். அவா் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா். குறைதீா் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மூதாட்டி கொலை: கணவரின் சகோதரா் கைது

சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள ... மேலும் பார்க்க

ஞானசேகரன் வழக்கின் தீா்ப்பு சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தண்டனை, சமூக விரோதிகளுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றாா், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன். இதுகுறித்து தூத்துக்குடியில் செய... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தல்

கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்களுக்கு இலவச வீடு கட்டித்தர வலியுறுத்தப்பட்டுள்ளது.கோவில்பட்டி நகரப் பகுதியில் வசிக்கும் துப்புரவு பணியாளா்கள், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவா... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே விவசாயி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்செந்தூா் அருகே மேலப்புதுக்குடியைச் சோ்ந்த மூக்காண்டி (70), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயபால் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 96 மதுபாட்டில்களுடன் 2 போ் கைது

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் விதிமுறை மீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய... மேலும் பார்க்க