செய்திகள் :

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

post image

மும்பை: உலகளாவிய சந்தைகளில் மந்தமான போக்குகளைத் தொடர்ந்ததால் இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.

ரஷ்ய-உக்ரைன் மோதல், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அந்நிய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் முதலீட்டாளர்களின் மனநிலையைப் வெகுவாக பாதித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 224.55 புள்ளிகள் சரிந்து 24,526.15 ஆக இருந்தது. பிறகு 796.75 புள்ளிகள் சரிந்து 80,654.26 ஆக இருந்த நிலையில், 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் நிலையற்ற போக்குகளைக் கண்டது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 77.26 புள்ளிகள் குறைந்து 81,373.75 ஆகவும் நிஃப்டி 34.10 புள்ளிகள் சரிந்து 24,716.60 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டைட்டன், எச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ் மற்றும் கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை சரிந்தும் மறுபுறம் அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட், எடர்னல் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

மே மாத விற்பனை தரவுகளுக்குப் பிறகு, ஆட்டோ பங்குகள் பெரும்பாலும் சரிவுடன் முடிந்தன. டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ, பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார் ஆகியவை 0.5 முதல் 2 சதவிகிதம் வரை சரிந்தன. அதே நேரத்தில் மஹிந்திரா & மஹிந்திரா கிட்டத்தட்ட 2 சதவிகிதம் உயர்ந்தன.

பிளாக் வர்த்தகத்தில் 12 சதவிகித பங்குகள் கைமாறியதை அடுத்து நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் பங்குகள் 10 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தன.

2025 ஆம் நிதியாண்டின் 4-வது காலாண்டில் லாபம் 47% அதிகரித்ததையடுத்து அஸ்ட்ராஜெனெகா பார்மா பங்குகள் 16 சதவிகிதம் உயர்ந்தன. 4-வது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 406% அதிகரித்ததையடுத்து ஜெனஸ் பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் பங்குகள் 6 சதவிகிதம் உயர்ந்தன.

நிதி திரட்டலை பரிசீலிப்பதற்கான இன்று நடைபெற்ற வாரியக் கூட்டத்திற்கு முன்னதாக யெஸ் வங்கி பங்குகள் 8 சதவிகிதம் உயர்ந்தன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிவுடன் முடிவடைந்த நிலையில் தென் கொரியாவின் கோஸ்பி உயர்ந்து முடிவடைந்தது. சீனா சந்தைகள் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மூடப்பட்டன.

ஐரோப்பிய சந்தைகள் சரிந்து வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) ஏற்ற-இறக்கத்துடன் முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) ரூ.6,449.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் வலுவான நிறுவன முதலீடுகளால் எஃப்எம்சிஜி, ரியல் எஸ்டேட் மற்றும் நிதிப் பங்குகள் ஆகியவை இந்திய சந்தையின் மீள்தன்மையை வெளிப்படுத்தியது.

ஜனவரி முதல் மார்ச் வரையான மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் 7.4 சதவிகிதமாக வளர்ச்சியடைந்தது. தனியார் நுகர்வு அதிகரிப்பு, கட்டுமானம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றின் வலுவான வளர்ச்சிக்கு இது உதவியது.

மொத்த ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரூ.2 டிரில்லியனை கடந்து. இது மே மாதத்தில் 16.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.2.01 லட்சம் கோடியாக உள்ளது.

அஸ்ட்ராஜெனெகா பார்மா, இந்தியன் வங்கி, இன்டலெக்ட் டிசைன், சிட்டி யூனியன் வங்கி, மேக்ஸ் ஃபைனான்சியல், பாரதி ஹெக்ஸாகாம், சி.சி.எல். தயாரிப்புகள், வெல்ஸ்பன் கார்ப், கிளாக்சோஸ்மித்க்லைன் பார்மாசூட்டிகல்ஸ் ஆகிய 120 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.28 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $64.84 ஆக உள்ளது.

இதையும் படிக்க: ஓராண்டில் 353 வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆா்பிஐ அபராதம்

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலையும் உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையி... மேலும் பார்க்க

2-ஆம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 8%

2025-ஆம் ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்!

சென்னை: இந்தியன் ஆயில் குழும நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் வைர விழா ஆண்டை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்காக சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டு... மேலும் பார்க்க

அறிமுகமான டாடா எலெக்ட்ரிக் புதிய ஹாரியர்.இவி கார்!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் இன்று அதன் மின்சார வாகன வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இது மின்சார எஸ்யூவி-யான ஹாரியர்.இவி-ஐ இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது 500 கி.மீ. அதிகமான வரம்பைக் கொண்டுள்ளதாக... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 பைசா குறைந்து 85.60 ஆக முடிவடைந்தது. நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் உள்ளூர் பங்குச் சந்தைகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில... மேலும் பார்க்க

அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் முடிவு!

அதானி நிறுவனங்கள் தங்கள் முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ததா என்று அமெரிக்க விசாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட பிறகு, இன்றைய வர்த்தகத்தில் ... மேலும் பார்க்க