2-ஆம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 8%
2025-ஆம் ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 15 இரண்டாம் நிலை நகரங்களில் 43,781 வீடுகள் விற்பனையாகின. 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 47,378 வீடுகள் விற்பனையாகியிருந்தன. இது 8 சதவீதம் குறைவாகும்.
இந்தாலும், மதிப்பின் அடிப்படையில் இந்த நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்து ரூ.40,443 கோடியாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் இது ரூ.38,102 கோடியாக இருந்தது.
இந்த 15 இரண்டாம் நிலை நகரங்களில் அகமதாபாத், சூரத், வதோதரா, காந்தி நகர், நாசிக், நாகபுரி, கோவா, லக்னெü, ஜெய்பூர், மொஹாலி, விசாகப்பட்டினம், கொச்சி, கோவை, போபால், புவனேசுவரம் ஆகியவை அடங்கும்.
கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் லக்னெüவில் வீடுகள் விற்பனை 25 சதவீதம் உயர்ந்து 1,301 வீடுகளாக உள்ளது. இது கோவை 21 சதவீதம், காந்தி நகரில் 18 சதவீதம், மொஹாலியில் 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மற்ற 11 நகரங்களிலும் மதிப்பீட்டு மாதத்தில் வீடுகள் விற்பனை குறைந்துள்ளது. அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் வீடுகள் விற்பனை 37 சதவீதம் சரிந்துள்ளது.
மதிப்பின் அடிப்படையில், ஜனவரி-மார்ச் காலாண்டில் வீடுகள் விற்பனை எட்டு நகரங்களில் உயர்ந்து, ஏழு நகரங்களில் குறைந்துள்ளது. இந்த 15 நகரங்களில் மிகப்பெரிய சந்தையான அகமதாபாதில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் குறைந்து 14,583-ஆக உள்ளது. ஆனால் மதிப்பின் அடிப்படையில் அது 7 சதவீதம் உயர்ந்து ரூ.13,565 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.12,730 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.