செய்திகள் :

2-ஆம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 8%

post image

2025-ஆம் ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 15 இரண்டாம் நிலை நகரங்களில் 43,781 வீடுகள் விற்பனையாகின. 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 47,378 வீடுகள் விற்பனையாகியிருந்தன. இது 8 சதவீதம் குறைவாகும்.

இந்தாலும், மதிப்பின் அடிப்படையில் இந்த நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்து ரூ.40,443 கோடியாக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் இது ரூ.38,102 கோடியாக இருந்தது.

இந்த 15 இரண்டாம் நிலை நகரங்களில் அகமதாபாத், சூரத், வதோதரா, காந்தி நகர், நாசிக், நாகபுரி, கோவா, லக்னெü, ஜெய்பூர், மொஹாலி, விசாகப்பட்டினம், கொச்சி, கோவை, போபால், புவனேசுவரம் ஆகியவை அடங்கும்.

கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் லக்னெüவில் வீடுகள் விற்பனை 25 சதவீதம் உயர்ந்து 1,301 வீடுகளாக உள்ளது. இது கோவை 21 சதவீதம், காந்தி நகரில் 18 சதவீதம், மொஹாலியில் 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மற்ற 11 நகரங்களிலும் மதிப்பீட்டு மாதத்தில் வீடுகள் விற்பனை குறைந்துள்ளது. அதிகபட்சமாக விசாகப்பட்டினத்தில் வீடுகள் விற்பனை 37 சதவீதம் சரிந்துள்ளது.

மதிப்பின் அடிப்படையில், ஜனவரி-மார்ச் காலாண்டில் வீடுகள் விற்பனை எட்டு நகரங்களில் உயர்ந்து, ஏழு நகரங்களில் குறைந்துள்ளது. இந்த 15 நகரங்களில் மிகப்பெரிய சந்தையான அகமதாபாதில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் குறைந்து 14,583-ஆக உள்ளது. ஆனால் மதிப்பின் அடிப்படையில் அது 7 சதவீதம் உயர்ந்து ரூ.13,565 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.12,730 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

நமது நிருபா் கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய ப... மேலும் பார்க்க

9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூ... மேலும் பார்க்க

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்ன... மேலும் பார்க்க