செய்திகள் :

அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் முடிவு!

post image

அதானி நிறுவனங்கள் தங்கள் முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ததா என்று அமெரிக்க விசாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட பிறகு, இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் 1 சதவிகிதம் முதல் 2.5 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.

அதானி செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவித்ததாவது:

இந்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் வேடிக்கைதனமானது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது என்றார்.

குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள் 2.2 சதவிகிதம் வரை சரிந்தன. அதே நேரத்தில் அதானி போர்ட்ஸ் 2.5 சதவிகிதம் வரை சரிந்தது.

அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி கிரீன் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகியவை தலா 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.

இந்தியாவின் முக்கிய குறியீட்டான நிஃப்டி 50 குறியீடு 0.4 சதவீதம் சரிந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்தது.

வளைகுடாவிற்கும் அதானியின் முந்த்ரா துறைமுகத்திற்கும் இடையில் பயணிக்கும் டேங்கர் கப்பல்கள், தடைகளைத் தவிர்க்கும் வகையில் இது நடைபெறுவது பொதுவானவை என்றது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.

இந்த ஆண்டு இதுவரை அதானி குழும பங்குகளில், அதானி போர்ட்ஸ் 16 சதவிகிதம் அதிகரித்து அதிக லாபம் ஈட்டியுள்ள நிலையில் அதானி டோட்டல் 11 சதவிதம் சரிந்து முடிவடைந்தது.

இதையும் படிக்க: இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

நமது நிருபா் கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய ப... மேலும் பார்க்க

9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூ... மேலும் பார்க்க

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்ன... மேலும் பார்க்க