அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் முடிவு!
அதானி நிறுவனங்கள் தங்கள் முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ததா என்று அமெரிக்க விசாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட பிறகு, இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் 1 சதவிகிதம் முதல் 2.5 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.
அதானி செய்தி தொடர்பாளர் இது குறித்து தெரிவித்ததாவது:
இந்த அறிக்கை ஆதாரமற்றது மற்றும் வேடிக்கைதனமானது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய எந்த விசாரணையும் எங்களுக்குத் தெரியாது என்றார்.
குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸின் பங்குகள் 2.2 சதவிகிதம் வரை சரிந்தன. அதே நேரத்தில் அதானி போர்ட்ஸ் 2.5 சதவிகிதம் வரை சரிந்தது.
அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி கிரீன் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகியவை தலா 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தன.
இந்தியாவின் முக்கிய குறியீட்டான நிஃப்டி 50 குறியீடு 0.4 சதவீதம் சரிந்த நிலையில், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்தது.
வளைகுடாவிற்கும் அதானியின் முந்த்ரா துறைமுகத்திற்கும் இடையில் பயணிக்கும் டேங்கர் கப்பல்கள், தடைகளைத் தவிர்க்கும் வகையில் இது நடைபெறுவது பொதுவானவை என்றது வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.
இந்த ஆண்டு இதுவரை அதானி குழும பங்குகளில், அதானி போர்ட்ஸ் 16 சதவிகிதம் அதிகரித்து அதிக லாபம் ஈட்டியுள்ள நிலையில் அதானி டோட்டல் 11 சதவிதம் சரிந்து முடிவடைந்தது.
இதையும் படிக்க: இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!