செய்திகள் :

அறிமுகமான டாடா எலெக்ட்ரிக் புதிய ஹாரியர்.இவி கார்!

post image

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் இன்று அதன் மின்சார வாகன வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இது மின்சார எஸ்யூவி-யான ஹாரியர்.இவி-ஐ இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது 500 கி.மீ. அதிகமான வரம்பைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதத்திற்கு சுமார் 25,000 யூனிட்கள் விற்பனையாகும் பிரதான பிரீமியம் எஸ்யூவி பிரிவிலிருந்து வாடிக்கையாளர்களை புதிய எஸ்யூவி கார் ஈர்க்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

ஹாரியர்.இவி-இன் விலை ரூ.21.49 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்கும் நிலையில் அதன் முன்பதிவு ஜூலை 2 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் ரக எஸ்யூவி பிரிவில், நாங்கள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில், இந்த பிரிவில் உள்ள செயல்திறனில் உற்சாகமளிக்கும் வகையில் ஒரு தயாரிப்பைக் கொண்டு வருகிறேம் என்றார் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா.

தற்போது ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய இரண்டு தயாரிப்புகளுடன் உயர் எஸ்யூவி பிரிவில் சுமார் 25 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.

ஆல் வீல் டிரைவ் திறன் மற்றும் 504 என்.எம். டார்க் உடன் வரும் ஹாரியர்.இவி எங்களின் சந்தைப் பங்கை வெகுவாக விரிவுபடுத்த உதவும்.

ஹாரியர்.இவி காரின் அம்சங்கள் வருமாறு:

  • பனோரமிக் சன்ரூஃப்

  • ஆம்பியன்ட் லைட்டிங்

  • பவர்டு முன்பக்க சீட்கள்

  • டால்பி அட்மாஸ் 5.1 வசதியுடன் 10 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம்

  • வெஹிக்கிள்-2-வெஹிக்கிள் சார்ஜிங் வசதிகள்

  • கனெக்டட் கார் தொழில்நுட்பம்

  • நான்கு டிரைவ் மோடுகள்

  • முழுவதுமான டிஜிட்டல் ரியர் வியூ மிரர்

  • ஆட்டோ பார்க் அசிஸ்ட்

  • ஆறு டெரைன் மோடுகள்

  • இல்லுமினேட்டட் டாடா லோகோ

  • நான்கு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல்

  • 14.53 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உடன் டிஜிட்டல் டிஸ்பிளே

உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹாரியர்.இவி எலெக்ட்ரிக் கார் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வருகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் தொடக்கநிலை வேரியன்ட்களில் 65 kWh பேட்டரி பேக் உடனும் உயர்நிலை வேரியன்டில் 75 kWh பேட்டரி உடன் வருகிறது.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

நமது நிருபா் கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய ப... மேலும் பார்க்க

9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூ... மேலும் பார்க்க

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்ன... மேலும் பார்க்க