செய்திகள் :

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

post image

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2-ல் பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது.

அனைவரும் வியக்கவைக்கும் வகையில் 204 ரன்கள் இலக்கை விரட்டி அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87* ரன்கள் விளாசி சிக்ஸருடன் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார்.

மேலும், மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றார் ஷ்ரேயாஸ் ஐயர். நாளை(ஜூன் 3) நடைபெறும் மகுடத்துக்கான ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாதியா இருவரும் இணைந்து கேக் வெட்டினர். கேக்கை ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஊட்டிய நெஸ் வாதியா வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.

இதைக் கண்டு ஒருவிதமான முகச் சுழிப்புடன் ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்து கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ஷ்ரேயாஸ் ஐயர் அங்கிருந்து நகர்ந்தார். இதற்கான விடியோக்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க:மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

7-வது முறையாக ஃபேர் பிளே விருது வென்ற சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஃபேர் பிளே (Fair Play) விருது வென்றுள்ளது.ஐபிஎல் சீசன் 18 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பெங்களூருவில் கோப்பையுடன் ஊர்வலம் செல்லும் ஆர்சிபி வீரர்கள்!

பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் இன்று மாலை ஊர்வலக் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதி... மேலும் பார்க்க

கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று முதல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ... மேலும் பார்க்க

10 பந்துகளில் 24 ரன்கள்: ஆட்டத்தை மாற்றிய ஜிதேஷ் சர்மா!

நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒ... மேலும் பார்க்க

191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி! கோப்பையை வெல்லுமா பஞ்சாப்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானப் படைகளில் போர் விமான அணிவகுப்பும் நடைபெற்றது.நடப்பு ஐபிஎல் தொடரின் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர... மேலும் பார்க்க