செய்திகள் :

ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

post image

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.

நடப்பு ஐபில் தொடரின் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2- போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் மெதுவாக ஓவர் ரேட்டில் பந்து வீசிய இரு அணிகள் கேப்டன்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 2-வது முறையாக இந்தத் தவறை செய்வதால் அவருக்கு ரூ.24 லட்சமும், மூன்றாவது முறையாக தவறு செய்த ஹார்திக் பாண்டியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இரு அணியின் கேப்டன்களைத் தவிர்த்து அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் எது குறைவோ, அதை அபராதமாக செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் நாளை(ஜூன் 3) நடைபெற்றும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

7-வது முறையாக ஃபேர் பிளே விருது வென்ற சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஃபேர் பிளே (Fair Play) விருது வென்றுள்ளது.ஐபிஎல் சீசன் 18 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பெங்களூருவில் கோப்பையுடன் ஊர்வலம் செல்லும் ஆர்சிபி வீரர்கள்!

பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் இன்று மாலை ஊர்வலக் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதி... மேலும் பார்க்க

கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று முதல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ... மேலும் பார்க்க

10 பந்துகளில் 24 ரன்கள்: ஆட்டத்தை மாற்றிய ஜிதேஷ் சர்மா!

நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒ... மேலும் பார்க்க

191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி! கோப்பையை வெல்லுமா பஞ்சாப்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானப் படைகளில் போர் விமான அணிவகுப்பும் நடைபெற்றது.நடப்பு ஐபிஎல் தொடரின் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர... மேலும் பார்க்க