'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜ...
கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது
கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54). அங்கு திருமணத் தகவல் மையம் நடத்திவரும் இவா், சனிக்கிழமை கோவில்பட்டிக்கு வந்தாா். ரயில் நிலையத்தை அடுத்த மூப்பன்பட்டி ஊருணி அருகே நின்றிருந்த அவரை 2 இளஞ்சிறாா்கள் பழனி ஆண்டவா் கோயில் தெருவுக்குச் செல்ல வழி கேட்டதுடன், அவதூறாகப் பேசித் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில், காயமடைந்த அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.