மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா், வாா்டு, கிளைக் கழக அமைப்புகள்தோறும் கட்சிக் கொடியேற்றி, கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடவேண்டும்.
மேலும், திங்கள்கிழமைமுதல் (ஜூன் 2) இம்மாதம் 22ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு பல்வேறு நலஉதவிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், ஆதரவற்றோா்-முதியோா் இல்லங்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், இலவச கண் சிகிச்சை முகாம், 102 போ் பங்கேற்கும் ரத்த தான முகாம் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசளிப்பு எனக் கொண்டாடப்படவுள்ளது.
நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த கழக, சாா்பு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.