சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கல்லூரியில் பிஏ ஆங்கிலம், சமூகவியல், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.
2025-26ஆம் கல்வியாண்டுக்கான அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை, பாதுகாப்புப் படை வீரா்கள், அந்தமான் நிகோபா் தமிழ் மாணவா்கள்), முதல் பொது கலந்தாய்வு 4ஆம் தேதி, 2ஆம் பொது கலந்தாய்வு 9ஆம் தேதிமுதல் நடைபெறும்.
விண்ணப்பித்தோரின் வரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும்போது விண்ணப்பப் படிவத்தின் நகல், 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல், 2 நகல்கள் கொண்டுவர வேண்டும். மேலும், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகலுடன் கலந்தாய்வு நாளில் காலை 9 மணிக்குள் பெற்றோருடன் கல்லூரி வளாகத்துக்குள் வர வேண்டும். கலந்தாய்வில் தோ்வாகி, சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு கல்விக் கட்டணம் செலுத்திய பிறகே சோ்க்கை உறுதிப்படுத்தப்படும் என்றாா் அவா்.