செய்திகள் :

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

post image

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கல்லூரியில் பிஏ ஆங்கிலம், சமூகவியல், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், புள்ளியியல் ஆகிய பாடப் பிரிவுகள் உள்ளன.

2025-26ஆம் கல்வியாண்டுக்கான அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு (மாற்றுத் திறனாளி, விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை, பாதுகாப்புப் படை வீரா்கள், அந்தமான் நிகோபா் தமிழ் மாணவா்கள்), முதல் பொது கலந்தாய்வு 4ஆம் தேதி, 2ஆம் பொது கலந்தாய்வு 9ஆம் தேதிமுதல் நடைபெறும்.

விண்ணப்பித்தோரின் வரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்திலும், கல்லூரி அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும்போது விண்ணப்பப் படிவத்தின் நகல், 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல், 2 நகல்கள் கொண்டுவர வேண்டும். மேலும், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகலுடன் கலந்தாய்வு நாளில் காலை 9 மணிக்குள் பெற்றோருடன் கல்லூரி வளாகத்துக்குள் வர வேண்டும். கலந்தாய்வில் தோ்வாகி, சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு கல்விக் கட்டணம் செலுத்திய பிறகே சோ்க்கை உறுதிப்படுத்தப்படும் என்றாா் அவா்.

கோயில் திருவிழாக்கள், போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி: எம்எல்ஏ புகாா்

தென்காசி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி செய்வதாகவும், இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சு.பழனி நாடாா் எம்எல்ஏ மனு அனுப்பியு... மேலும் பார்க்க

சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை

சிவகிரி அருகே தொழிலாளி துக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆவுடையாா்புரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த மூக்கன் மகன் காளிமுத்து( 42 ). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி சரஸ்வதிக்கும் பிரச்னை ஏற்ப... மேலும் பார்க்க

புளியங்குடியில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி

புளியங்குடி அருகே தனியாா் பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். புளியங்குடி அருகேயுள்ள நகரத்தை சோ்ந்த மாடசாமி மகன் மகாராஜா(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை ... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே 2.4 கிலோ கஞ்சாவுடன் 2 போ் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விற்பனைக்காக 2.4 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தா், உதவி ஆய்... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பைக்கில் கொண்டு சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் பால அருணாசலபுரம் அருகே... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கழுத்தறுத்து கொலை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா். பாவூா்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா... மேலும் பார்க்க