செய்திகள் :

மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

post image

மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளாசன் ஓய்வு!

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மிகப் பெரிய தருணங்களை விரும்புகிறேன்

அதிரடியாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற உதவிய ஷ்ரேயாஸ் ஐயர், மிகப் பெரிய தருணங்களில் நன்றாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், என்னுடைய வெற்றியின் ரகசியம் என்னவென்று எனக்குத் தெரியாது. மிகப் பெரிய தருணங்கள் எனக்கு பிடிக்கும். மிகப் பெரிய தருணங்களில் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு பெரிய முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும் என எனக்கும், அணி வீரர்களிடத்திலும் எப்போதும் கூறுவேன்.

மும்பைக்கு எதிரான போட்டி அதற்கான சரியான உதாரணம் என நினைக்கிறேன். மிகவும் பதற்றமாக இருப்பதைக் காட்டிலும், அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்தினேன். போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தை பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் அனைவரிடத்திலும் பார்க்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள் என்றார்.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து மேக்ஸ்வெல் ஓய்வு!

அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

7-வது முறையாக ஃபேர் பிளே விருது வென்ற சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஃபேர் பிளே (Fair Play) விருது வென்றுள்ளது.ஐபிஎல் சீசன் 18 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பெங்களூருவில் கோப்பையுடன் ஊர்வலம் செல்லும் ஆர்சிபி வீரர்கள்!

பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் இன்று மாலை ஊர்வலக் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதி... மேலும் பார்க்க

கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று முதல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ... மேலும் பார்க்க

10 பந்துகளில் 24 ரன்கள்: ஆட்டத்தை மாற்றிய ஜிதேஷ் சர்மா!

நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒ... மேலும் பார்க்க

191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி! கோப்பையை வெல்லுமா பஞ்சாப்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானப் படைகளில் போர் விமான அணிவகுப்பும் நடைபெற்றது.நடப்பு ஐபிஎல் தொடரின் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர... மேலும் பார்க்க