செய்திகள் :

புளியங்குடி அருகே 2.4 கிலோ கஞ்சாவுடன் 2 போ் கைது

post image

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விற்பனைக்காக 2.4 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தா், உதவி ஆய்வாளா் மாடசாமி , காவலா்கள் பால்ராஜ், செந்தூா் செல்வம் ஆகியோா் நெல்கட்டும்செவல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது, அங்குள்ள சுடுகாடு அருகே நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் கீழப்புதூா் ராமா் மகன் குணசேகரன்(28), முருகன் மகன் செல்வக்குமாா் (25) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 2 கிலோ 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

புகையிலைப் பொருள்: கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் பால அருணாசலபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் போகநல்லூா் பள்ளிக்கூட தெருவை சோ்ந்த வன்னியன் மகன் தங்கராஜ் (36) என்பதும், பைக்கில் மூன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசெல்வதும் தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உபமின்நிலைய பகுதிகளில் ஜூன்4இல் மின்தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பு: தென்காசி, ச... மேலும் பார்க்க

கடையநல்லூா், வீரசிகாமணி புளியங்குடியில் நாளை மின்தடை

கடையநல்லூா், வீரசிகாமணி, புளியங்குடி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட மின் ச... மேலும் பார்க்க

தென்காசியில் ஆட்சியரகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

தென்காசியில் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு மன... மேலும் பார்க்க

ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 16 இல் நடைபெறுகிறது. இதையொட்டி கால்நாட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு முன்மண்டபம் கட்டி நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கோரிக்கை

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரக் கோரி, அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் நகராட்ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் ஒன்றியக்குழு கூட்டம்: குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி திரண்ட மக்கள்

வாசுதேவநல்லூா் ஒன்றியம் தலைவன்கோட்டை பகுதியில் நிலவிவரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா். வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு... மேலும் பார்க்க