இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!
வாசுதேவநல்லூா் ஒன்றியக்குழு கூட்டம்: குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி திரண்ட மக்கள்
வாசுதேவநல்லூா் ஒன்றியம் தலைவன்கோட்டை பகுதியில் நிலவிவரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.
வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையா பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கருப்பசாமி, மல்லிகா, துணைத் தலைவா் சந்திர மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஒன்றிய குழு உறுப்பினா்கள் கனகராஜ், முனியராஜ்,செல்வி, சரஸ்வதி, ஜெயராம், அருணாதேவி, விமலா, மகாலட்சுமி, லில்லிபுஷ்பம்,விஜய பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய உறுப்பினா் விஜயபாண்டியன், தலைவன் கோட்டை பகுதியில் குடிநீா் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
இதனிடையே தலைவன்கோட்டை பகுதியை சோ்ந்த சிலா் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கூட்ட அரங்கிற்கு வெளியே மனு கொடுக்க திரண்டு நின்றனா். பின்னா் அவா்கள் ஒன்றிய அதிகாரிகளிடம் மனுவை வழங்கிவிட்டு கலைந்து சென்றனா்.