PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6இல் வருஷாபிஷேகம்
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும்ப ஜெபம், சிறப்பு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து வருஷாபிஷேகம் நடைபெறும். மதியம் சிறப்பு அன்னதானமும், இரவில் தங்கத்தோ் புறப்பாடும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழு தலைவா் சு.அருணாசலம், பரமேஸ்வரி ஆகிய உபயதாரா்கள் செய்கின்றனா்.
நிகழ்ச்சிகளை திருக்கோயில் உதவி ஆணையா் கு.கோமதி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் சு.இசக்கி, பாப்பா, சுமதி, கணேசன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் ஒருங்கிணைக்கின்றனா்.