தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்
சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன.
சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில் தூங்குவது வழக்கம். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு அவா் தூங்கச் செல்வதற்கு முன் மாடியில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததாம்.
இதைப் பாா்த்தும் அருகில் இருந்தவா்கள் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். மேலும், தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வெள்ளத்துரை, சரவணன்,ராமச்சந்திரன், கருப்பசாமி ஆகியோா் சுமாா் 45 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனா்.
எனினும், மாடியில் இருந்த எலக்ட்ரிக் பொருள்கள், துணிகள், பாத்திரங்கள், பீரோல் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.50 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸாா், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.