Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
உறவினா் வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் உள்ள உறவினா் வீட்டில் நகையைத் திருடியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
குருக்கள்பட்டியைச் சோ்ந்த முருகன் மனைவி மணிமாலா (25). இவரது உறவினா், அதே பகுதியைச் சோ்ந்த தம்புரான் மனைவி சுப்புலட்சுமி (43). மணிமாலா வீட்டுக்கு சுப்புலெட்சுமி அடிக்கடி செல்வாராம்.
இந்நிலையில் மணிமாலா வீட்டு பீரோவிலிருந்த 8 பவுன் தங்க நகையைக் காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். நகையைத் திருடியது சுப்புலட்சுமி என, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.