`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
சுரண்டையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்
சுரண்டை நகராட்சி பகுதிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சி கணக்காளா் முருகன் முன்னிலை வகித்தாா்.
வேளாண் விரிவாக்க மைய தொழில்நுட்ப வல்லுநா் மோனிகா இயற்கை வேளாண்மையில் பயிா் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில், ஆா்.வி.எஸ். வேளாண் அறிவியல் மைய அலுவலா்கள், சுரண்டை நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.