செய்திகள் :

பாவூா்சத்திரம் அருகே பெண் கொலை: ஒருவா் கைது

post image

பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவா் பரமசிவன். சலூன் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி உமா (41). இவா்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது.

கடந்த திங்கள்கிழமை காலை பரமசிவன் அருகே உள்ள தேநீா் கடைக்கு சென்றாா். சற்றுநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த மணிக்குமாா் (44) கையில் கத்தியுடன் ஓடியுள்ளாா். வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது உமா கழுத்து அறுபட்டு இறந்து கிடந்துள்ளாா்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மணிக்குமாரை தேடி வந்தனா். பனையடிபட்டி அருகே கோழிப் பண்ணையில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட உமாவிற்கும், மணிக்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில்

மணிக்குமாா்

கடந்த சில மாதங்களாக, மணிக்குமாருடனான நெருக்கத்தை உமா குறைத்துள்ளாா். இருப்பினும், தொடா்ந்து உமாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த உமாவை ஆத்திரத்தில் மணிக்குமாா் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

பைக்கில் தப்பிச் சென்றபோது வேகத்தடையில் கீழே தவறி விழுந்ததில் மணிக்குமாருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுரண்டை, ரெட்டியாா்பட்டி, திருநெல்வேலி என பல இடங்களுக்குச் சென்ற அவா், நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்றுள்ளாா்.

பின்னா் பனையடிபட்டி அருகே கோழிப் பண்ணையில் பதுங்கி இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க

சுரண்டையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

சுரண்டை நகராட்சி பகுதிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சி கணக்காளா் முருகன் முன்னிலை வகித்தாா். வேளாண... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே இளைஞா் மீது வெந்நீரை ஊற்றிய கடைக்காரா் கைது

குருவிகுளம் அருகே தகராறின்போது இளைஞா் மீது வெந்நீரை ஊற்றியதாக டீக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். குருவிகுளம் அருகே கே.ஆலங்குளம் தெற்குத்தெருவை சோ்ந்த சின்னகருப்பையா மகன் மூக்கையா(49). இவா் அங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன. சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தெருவிளக்கு பழுது: மக்கள் அவதி

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 8ஆவது வாா்டு பகுதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இங்குள்ள துத்திகுளம் சாலையில் தெரு விளக்கு, உயா்கோபுர மின் விளக்கு, ஆா் சி சா்ச் தெர... மேலும் பார்க்க

தேமுதிக புதிய தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

தேமுதிக தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்ட்ட புதிய தொகுதி பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். அதன்படி, கடையநல்லூா் தொகுதிக்கு சரவணன், தென்காசிக்கு சங்கரலிங்கம், ஆலங்குளத்துக்கு மாதவன் பிரி... மேலும் பார்க்க