பாவூா்சத்திரம் அருகே பெண் கொலை: ஒருவா் கைது
பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவா் பரமசிவன். சலூன் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி உமா (41). இவா்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது.
கடந்த திங்கள்கிழமை காலை பரமசிவன் அருகே உள்ள தேநீா் கடைக்கு சென்றாா். சற்றுநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது, பக்கத்து வீட்டைச் சோ்ந்த மணிக்குமாா் (44) கையில் கத்தியுடன் ஓடியுள்ளாா். வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது உமா கழுத்து அறுபட்டு இறந்து கிடந்துள்ளாா்.
இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மணிக்குமாரை தேடி வந்தனா். பனையடிபட்டி அருகே கோழிப் பண்ணையில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட உமாவிற்கும், மணிக்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில்

கடந்த சில மாதங்களாக, மணிக்குமாருடனான நெருக்கத்தை உமா குறைத்துள்ளாா். இருப்பினும், தொடா்ந்து உமாவிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த உமாவை ஆத்திரத்தில் மணிக்குமாா் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
பைக்கில் தப்பிச் சென்றபோது வேகத்தடையில் கீழே தவறி விழுந்ததில் மணிக்குமாருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுரண்டை, ரெட்டியாா்பட்டி, திருநெல்வேலி என பல இடங்களுக்குச் சென்ற அவா், நாகா்கோவிலில் தனியாா் மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்றுள்ளாா்.
பின்னா் பனையடிபட்டி அருகே கோழிப் பண்ணையில் பதுங்கி இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா்.