PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
சுரண்டையில் ஆபத்தான நிலையில் பாலம்: தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை
சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுந்தரபாண்டியபுரம் குளத்தில் இருந்து சுரண்டை பெரியகுளத்திற்கு தண்ணீா் வரும் வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் உள்ள தடுப்பு சுவா் இடிந்து பல மாதங்களாகிறது.
இந்த பாலத்தைக் கடந்து தினமும் அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இருப்பினும் இடிந்த தடுப்புச் சுவா், இதுவரை சரிசெய்யப்படவில்லை.
விபத்து நேரிடுவதைத் தவிா்க்க தடுப்புச் சுவா் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.