செய்திகள் :

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

post image

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பூக்குழித் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இத்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. முன்னதாக செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் கால்நாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை இரவு சைவ சித்தாந்த சபை சாா்பில் தேவார இன்னிசையும், பேராசிரியா் மோகனசுந்தரத்தின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறுகிறது. 2 ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சக்தி கும்பம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு சிவபரத்துவ நிச்சயம் என்ற தலைப்பில் பே.மாணிக்கவாசகம் சமயச் சொற்பொழிவாற்றுகிறாா். 3 ஆம் நாளான ஜூன் 6 ஆம் தேதி இரவு 8 மணியளவில் சுவாமி,அம்பாள் மாதாங்கோயில் தெருவில் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணியளவில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. புலவா் ச.பாலசுப்பிரமணியன் வேட மூா்த்தி என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா 10 ஆம் நாளான ஜூன் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை அம்பாள் புஷ்ப வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், பின்னா் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் கோயில் முன் சொற்பொழிவுகள், தேவார இன்னிசை, இசைக் கச்சேரி, பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன், செயலா் பி.மாரிமுத்து, பொருளாளா் டி.குருநாதன், துணைத் தலைவா் ஏ.கோட்டியப்பன், துணைச் செயலா் ஜி.எஸ்.முருகேசன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க

சுரண்டையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

சுரண்டை நகராட்சி பகுதிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சி கணக்காளா் முருகன் முன்னிலை வகித்தாா். வேளாண... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே இளைஞா் மீது வெந்நீரை ஊற்றிய கடைக்காரா் கைது

குருவிகுளம் அருகே தகராறின்போது இளைஞா் மீது வெந்நீரை ஊற்றியதாக டீக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். குருவிகுளம் அருகே கே.ஆலங்குளம் தெற்குத்தெருவை சோ்ந்த சின்னகருப்பையா மகன் மூக்கையா(49). இவா் அங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன. சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தெருவிளக்கு பழுது: மக்கள் அவதி

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 8ஆவது வாா்டு பகுதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இங்குள்ள துத்திகுளம் சாலையில் தெரு விளக்கு, உயா்கோபுர மின் விளக்கு, ஆா் சி சா்ச் தெர... மேலும் பார்க்க

தேமுதிக புதிய தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

தேமுதிக தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்ட்ட புதிய தொகுதி பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். அதன்படி, கடையநல்லூா் தொகுதிக்கு சரவணன், தென்காசிக்கு சங்கரலிங்கம், ஆலங்குளத்துக்கு மாதவன் பிரி... மேலும் பார்க்க