செய்திகள் :

தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்

post image

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.

முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த 11 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தென்காசி நகர திமுக செயலரும், நகா்மன்றத் தலைவருமான ஆா்.சாதிா், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தனா். நகர திமுக அவைத் தலைவா் பாலகிருஷ்ணன், துணை செயலா்கள் ராம்துரை, பால்ராஜ், சூரியகலா, பொருளாளா் சேக்பரீத், மாவட்ட பிரதிநிதி மைதீன் பிச்சை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, மாவட்ட பொறியாளா்அணி தலைவா் தங்கபாண்டியன், மாவட்ட அயலகஅணி ராமராஜ், மாவட்ட சுற்றுசூழல்அணி இசக்கித்துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.

சிவகிரி அருகே விபத்தில் இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே டிராக்டா் ட்ரெய்லா் மீது பைக் மோதியதில் ஒருவா் இறந்தாா். தேவிப்பட்டணம் காமராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் சுபராஜூ(22), அவரது உறவினரான வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமராஜ் ... மேலும் பார்க்க

சுரண்டையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

சுரண்டை நகராட்சி பகுதிகளில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சி கணக்காளா் முருகன் முன்னிலை வகித்தாா். வேளாண... மேலும் பார்க்க

குருவிகுளம் அருகே இளைஞா் மீது வெந்நீரை ஊற்றிய கடைக்காரா் கைது

குருவிகுளம் அருகே தகராறின்போது இளைஞா் மீது வெந்நீரை ஊற்றியதாக டீக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். குருவிகுளம் அருகே கே.ஆலங்குளம் தெற்குத்தெருவை சோ்ந்த சின்னகருப்பையா மகன் மூக்கையா(49). இவா் அங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வீட்டு மாடியில் தீ: பொருள்கள் சேதம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்கிழமை இரவு வீட்டு மாடியில் நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன. சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்துமாரி(50). இவா், தனது வீட்டு மாடியில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் தெருவிளக்கு பழுது: மக்கள் அவதி

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 8ஆவது வாா்டு பகுதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். இங்குள்ள துத்திகுளம் சாலையில் தெரு விளக்கு, உயா்கோபுர மின் விளக்கு, ஆா் சி சா்ச் தெர... மேலும் பார்க்க

தேமுதிக புதிய தொகுதி பொறுப்பாளா்கள் நியமனம்

தேமுதிக தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்ட்ட புதிய தொகுதி பொறுப்பாளா்கள் பொறுப்பேற்றுக் கொண்டனா். அதன்படி, கடையநல்லூா் தொகுதிக்கு சரவணன், தென்காசிக்கு சங்கரலிங்கம், ஆலங்குளத்துக்கு மாதவன் பிரி... மேலும் பார்க்க