தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.
முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த 11 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது.
தென்காசி நகர திமுக செயலரும், நகா்மன்றத் தலைவருமான ஆா்.சாதிா், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தனா். நகர திமுக அவைத் தலைவா் பாலகிருஷ்ணன், துணை செயலா்கள் ராம்துரை, பால்ராஜ், சூரியகலா, பொருளாளா் சேக்பரீத், மாவட்ட பிரதிநிதி மைதீன் பிச்சை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, மாவட்ட பொறியாளா்அணி தலைவா் தங்கபாண்டியன், மாவட்ட அயலகஅணி ராமராஜ், மாவட்ட சுற்றுசூழல்அணி இசக்கித்துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.