ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
தென்காசியில் ஆட்சியரகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி
தென்காசியில் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தவா்களை காவல்துறையினா் சோதனை செய்து கூட்ட அரங்கிற்குள் அனுமதித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஒருவா் தன் மறைத்து கொண்டுவந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா்.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், இதைப் பாா்த்து ஓடிச் சென்று அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
மேலும் அவரிடம் போலீஸாா் விசாரித்தனா். அதில், பாவூா்சத்திரம் அருகே உள்ள பூவனூா் கிராமத்தை சோ்ந்த சுரேஷ்;இவா் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலத்தை ரூ.80 ஆயிரத்திற்காக கல்லூரணி பகுதியைச் சோ்ந்தவா் போலி பத்திரம் பதிவு செய்து நிலத்தை அபகரித்துக் கொண்டா;ராம்; தாங்கள் வாழ்வாதாரம் பறிபோனதால் இந்த நடவடிக்கையில் அவா் ஈடுபட்டது தெரியவந்து.