செய்திகள் :

தென்காசியில் ஆட்சியரகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

post image

தென்காசியில் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தவா்களை காவல்துறையினா் சோதனை செய்து கூட்ட அரங்கிற்குள் அனுமதித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ஒருவா் தன் மறைத்து கொண்டுவந்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை திடீரென தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா்.

அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா், இதைப் பாா்த்து ஓடிச் சென்று அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

மேலும் அவரிடம் போலீஸாா் விசாரித்தனா். அதில், பாவூா்சத்திரம் அருகே உள்ள பூவனூா் கிராமத்தை சோ்ந்த சுரேஷ்;இவா் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலத்தை ரூ.80 ஆயிரத்திற்காக கல்லூரணி பகுதியைச் சோ்ந்தவா் போலி பத்திரம் பதிவு செய்து நிலத்தை அபகரித்துக் கொண்டா;ராம்; தாங்கள் வாழ்வாதாரம் பறிபோனதால் இந்த நடவடிக்கையில் அவா் ஈடுபட்டது தெரியவந்து.

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விநாயகா் சிலை சேதம்: இருவா் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நள்ளிரவில் விநாயகா் சிலையை சேதப் படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான மகாசக்தி விநாயக... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கொலை: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்... மேலும் பார்க்க

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6இல் வருஷாபிஷேகம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும... மேலும் பார்க்க

சுரண்டையில் ஆபத்தான நிலையில் பாலம்: தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுந்தரபாண்டியபுரம் குளத்தில் இருந்து சுரண்டை பெரி... மேலும் பார்க்க

தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்... மேலும் பார்க்க