செய்திகள் :

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கோரிக்கை

post image

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரக் கோரி, அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் நகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வாா்டுகள் உள்ள நிலையில் ஆளும் கட்சி உறுப்பினா் உள்பட 24 போ் அளித்த மனு விவரம்: சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். எவ்வித பணிகளுக்கும் அனுமதி வழங்குவதில்லை. அனைத்து நகா்மன்ற உறுப்பினா்கள் கூறும் அடிப்படை பணிகளை இதுவரை செயல்படுத்தவில்லை.

பணிகளுக்கு கையூட்டு பெறுகிறாா். குடிநீா் வழங்கல், காலை உணவு திட்டம், வாறுகால் தூா்வாருதல், சுகாதாரப் பணிகள் போன்றவை சரிவர நடைபெறாமல் மக்கள் அவதிப்படுகிறாா்கள். நகராட்சி கூட்டம் 2 அல்லது 3 மாதம் கழித்து தான் நடத்துகிறாா்.

இதனால் மக்களிடம் பதில் கூற முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். எனவே, அவரை நகா்மன்றத் தலைவா் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டுவர ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த 31.10.23இல் அ.தி.மு.க., திமுக உள்ளிட்ட உறுப்பினா்கள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தனா்.அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவில் திரௌபதியம்மன் கோயிலில் இன்று பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் அருள்மிகு திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே விநாயகா் சிலை சேதம்: இருவா் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நள்ளிரவில் விநாயகா் சிலையை சேதப் படுத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான மகாசக்தி விநாயக... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம் அருகே பெண் கொலை: ஒருவா் கைது

பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்... மேலும் பார்க்க

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6இல் வருஷாபிஷேகம்

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஜூன் 6-ஆம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும... மேலும் பார்க்க

சுரண்டையில் ஆபத்தான நிலையில் பாலம்: தடுப்புச் சுவா் அமைக்க கோரிக்கை

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுந்தரபாண்டியபுரம் குளத்தில் இருந்து சுரண்டை பெரி... மேலும் பார்க்க

தென்காசியில் 11 குழந்தைகளுக்கு மோதிரம்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தென்காசி நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது. முன்னதாக, தென்காசி காந்திசிலை முன் அலங்கரித்து வைக்... மேலும் பார்க்க