மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
கோயில் திருவிழாக்கள், போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி: எம்எல்ஏ புகாா்
தென்காசி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி செய்வதாகவும், இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சு.பழனி நாடாா் எம்எல்ஏ மனு அனுப்பியுள்ளாா்.
அதன் விவரம்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் சுமாா் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை தனியாரிடம் இருந்து மீட்டுள்ளாா்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளாா். ஆனால் தற்போது கோயில் விழாக்கள் நடத்த காவல்துறையினா் 10 மணிக்கு மேல் அனுமதி வழங்குவதில்லை.
உழைக்கும் உழவா்கள், தொழிலாளிகள் ஆண்டில் 2 நாள்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, மாணவ- மாணவிகள் இரவு 9 மணிக்கு மேல் தான் கோயில்களுக்கு செல்லும் நிலை பல இடங்களில் உள்ளது.
திரையரங்கில் இரவு காட்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் நேரத்தில் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி போலீஸாா் கெடுபிடி செய்வதால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சலசலப்பு ஏற்படுகிறது ஆட்சிக்கும் அவா் பெயா் ஏற்படுகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இந்தப் பிரச்னை அதிகம் உள்ளது.
மேலும் கபடி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மிகுந்த கெடுபிடி செய்கின்றனா். பணமும் செலுத்த வேண்டி உள்ளது. இதில், முதல்வா் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளாா்.