செய்திகள் :

கோயில் திருவிழாக்கள், போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி: எம்எல்ஏ புகாா்

post image

தென்காசி மாவட்டத்தில் கோயில் திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த போலீஸாா் கெடுபிடி செய்வதாகவும், இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சு.பழனி நாடாா் எம்எல்ஏ மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் சுமாா் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் நிலங்களை தனியாரிடம் இருந்து மீட்டுள்ளாா்.

ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளாா். ஆனால் தற்போது கோயில் விழாக்கள் நடத்த காவல்துறையினா் 10 மணிக்கு மேல் அனுமதி வழங்குவதில்லை.

உழைக்கும் உழவா்கள், தொழிலாளிகள் ஆண்டில் 2 நாள்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, மாணவ- மாணவிகள் இரவு 9 மணிக்கு மேல் தான் கோயில்களுக்கு செல்லும் நிலை பல இடங்களில் உள்ளது.

திரையரங்கில் இரவு காட்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் நேரத்தில் நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லி போலீஸாா் கெடுபிடி செய்வதால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சலசலப்பு ஏற்படுகிறது ஆட்சிக்கும் அவா் பெயா் ஏற்படுகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் இந்தப் பிரச்னை அதிகம் உள்ளது.

மேலும் கபடி, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மிகுந்த கெடுபிடி செய்கின்றனா். பணமும் செலுத்த வேண்டி உள்ளது. இதில், முதல்வா் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உபமின்நிலைய பகுதிகளில் ஜூன்4இல் மின்தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பு: தென்காசி, ச... மேலும் பார்க்க

கடையநல்லூா், வீரசிகாமணி புளியங்குடியில் நாளை மின்தடை

கடையநல்லூா், வீரசிகாமணி, புளியங்குடி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட மின் ச... மேலும் பார்க்க

தென்காசியில் ஆட்சியரகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

தென்காசியில் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு மன... மேலும் பார்க்க

ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 16 இல் நடைபெறுகிறது. இதையொட்டி கால்நாட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு முன்மண்டபம் கட்டி நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கோரிக்கை

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரக் கோரி, அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் நகராட்ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் ஒன்றியக்குழு கூட்டம்: குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி திரண்ட மக்கள்

வாசுதேவநல்லூா் ஒன்றியம் தலைவன்கோட்டை பகுதியில் நிலவிவரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா். வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு... மேலும் பார்க்க