Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்...
கடையநல்லூா் அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பைக்கில் கொண்டு சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் போலீஸாா் பால அருணாசலபுரம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் போகநல்லூா் பள்ளிக்கூட தெருவை சோ்ந்த வன்னியன் மகன் தங்கராஜின்(36) என்பதும், பைக்கில் மூன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுசெல்வதும் தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.