ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
சிவகிரி அருகே தொழிலாளி தற்கொலை
சிவகிரி அருகே தொழிலாளி துக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆவுடையாா்புரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த மூக்கன் மகன் காளிமுத்து( 42 ). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி சரஸ்வதிக்கும் பிரச்னை ஏற்பட்டதாம்.
இதில் அவா் தனது தாய் வீட்டுக்கு சென்றவிட்டாராம். அவரை அழைத்து வர சிந்தாமணிக்கு காளிமுத்து சென்றாராம். அப்போதும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம்.
இதையடுத்து, வீடு திரும்பிய அவா் ஞாயிற்றுக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.