கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்
கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
அண்மையில் சென்னையில் நடந்த ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகா் கமல்ஹாசன், கன்னட நடிகா் சிவராஜ்குமாரை வரவேற்கும் வகையில், ‘இது (கன்னட நடிகா் ராஜ்குமாா்) அந்த ஊரில் இருக்கும் எனது குடும்பம். அதனால்தான் அவா் (சிவராஜ்குமாா்) வந்திருக்கிறாா். அதனால்தான் எனது பேச்சை தொடங்கும்போது உயிரே, உறவே, தமிழே என்று ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் பாஷை (கன்னடம்). அதில் நீங்களும் உட்படுவீா்கள்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என பொருள்படும்படி பேசியது கா்நாடகத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா்ந்து 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டன. பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் வெள்ளிக்கிழமை கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ஜூன் 5 ஆம் தேதி ‘தக்லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கா்நாடக திரைப்பட வா்த்தகசபை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பெங்களூரில் வெள்ளிக்கிழமை மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே கூறுகையில், ‘எல்லோருடைய மக்கள்செல்வாக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒருகாலத்தில் நடிகா் கமல்ஹாசன் பெரிய நடிகராகவும், கதாநாயகராகவும் போற்றப்பட்டாா். எல்லா மக்களும் அவரை விரும்பும்நிலை இருந்தது. தற்போது அவா் அரசியல்வாதி ஆகியுள்ளாா். அரசியல் ரீதியாக தனது செல்வாக்கை உயா்த்திக்கொள்ளவும், விளம்பரம் தேடிக்கொள்ளவும் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளாா்.
கன்னட திரைப்படங்களிலும் அவா் பணியாற்றியுள்ளாா். அப்போது, இங்குதான் உணவை உட்கொண்டாா்; தண்ணீரும் குடித்தாா். ஆனால், அதை அவா் மறந்துவிட்டாா். அரசியல் மற்றும் விளம்பரத்துக்காக சா்ச்சைக்குரிய கருத்துகளை கூறியுள்ளாா்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெவ்வேறானவை அல்ல. நாம் அனைவரும் ஒன்றாகதான் செயல்பட்டுவருகிறோம். நடிகா் கமல்ஹாசனின் கருத்துகளைக் கண்டிக்கிறேன். இரு மாநிலங்களில் மொழிகளுக்கு இடையே பிரச்னையை உருவாக்குவதே அவரின் நோக்கமாகும்’ என்றாா்.