செய்திகள் :

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்ததை ஏற்றுக் கொள்வோமா? சி.பி. ராதா கிருஷ்ணன் பேச்சு

post image

மத்திய அரசின் நிதியை மாநில அரசு போற்றுவதில்லை என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் பேசுகையில், தீவிரவாதம் எதுவாக இருந்தாலும் சரி, எந்த உருவத்தில் வந்தாலும் சரி, அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய நிதி அளித்தாலும், அதனைப் போற்ற சிலருக்கு மனம் வரவில்லை. மத்திய அரசோடு மாநில அரசு இணைந்து செயல்படுவதுதான், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழக ஆளுநர் மிகவும் நல்லவர். தன் கடமையைச் சரியாகச் செய்துவரும் அவருக்கு, மாநில அரசும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

டாஸ்மாக் பிரச்னை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனைக் காட்டிலும், கஞ்சா அதிகமாகப் பரவி வருகிறது. ஆகையால், கஞ்சாவை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதே தவறு. மத்திய அரசானது ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு என்ன பஞ்சாயத்து அரசா? நீங்கள் பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள். உங்கள் எண்ணம் தவறாக இருப்பதால்தான், இதுவரை இல்லாத மொழிப்பெயர்ப்பைக் கொண்டு வருகிறீர்கள்.

திமுகவை ஒழிப்பதுதான் தனது வேலை என்றுகூறி, தனது இயக்கத்தை கமல்ஹாசன் தொடங்கினார். ஆனால், இன்று திமுகவோடு இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறார். பதவிக்காகவே அவர் அப்படி பேசுகிறார்.

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா.

அதுபோலத் தான், நாம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள்தான், பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்.

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு! - முதல்வர் பெருமிதம்

சித்திரைத் திருவிழா போல் முத்திரை பதித்த பொதுக்குழு நடைபெற்றதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.மதுரை - மேலூர் சாலை, உத்தங்குடியில் நேற்று (ஜூன் 1) திமுக பொதுக்குழுக் கூட்டம் 48 ஆண்டுகளுக்கு பிறகு... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 2.81 பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து உயர்கல... மேலும் பார்க்க

காலமானார் எல். அனந்தலட்சுமி!

முனைவர் அனந்தலட்சுமி உடல்நலக் குறைவால் காலமானார்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஒன்றியக்குழு அலுவலகம் அருகே நகராட்சி ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த (தீயணைப்பு நிலையம் பின்புறம்) முனைவர் எல்.... மேலும் பார்க்க

இளைஞர்கள் விவசாயத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது: டாக்டர் பரசுராமன்

இயற்கை வேளாண்மை குறித்தும் வேளாண்மையில் இளைஞர்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்தும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் பரசுராமன் பேசியது:இந்திய நாடு விவசாய நாடு... மேலும் பார்க்க

ஒரு தலைக் காதல்: கத்தியால் குத்தி கல்லூரி மாணவி கொலை!

ஒரு தலைக் காதல் விவகாரத்தில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதியைச... மேலும் பார்க்க

பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!

பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற... மேலும் பார்க்க