செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் ...
ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் கருடசேவை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை கருடசேவை நடைபெற்றது. கருடசேவையையொட்டி சாமி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் க. வெங்கடேசன், ஆய்வாளா் தக்காா் பாஸ்கரன், மேலாளா் தமிழ்ச்செல்வன் கோவில் பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்,
