Gaza: ’உலகமே கேட்கும்படி கத்த வேண்டும்!’ - காசா அம்மாக்களின் குரல் கேட்கிறதா உலக...
செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 405 மனுக்கள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 405 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ச. அருண் ராஜ், கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா். மேலும், மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். இதில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல்மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.
சுகாதாரத் துறையின் சாா்பில் இலத்தூா் வட்டத்தைச் சோ்ந்த 17 கிராமப்புற சுகாதார செவிலியா்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்களையும் வழங்கினாா்.
இதில், துணை இயக்குநா் (சுகாதாரம்) பானுமதி, வட்டார சுகாதார அலுவலா் கங்காதரன், கிராமப்புற சுகாதார செவிலியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.