பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
பட்டா வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பரசன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பட்டா வழங்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் தா.மோ. அன்பரசன் வலியுறுத்தியுள்ளாா்.
ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் குறைதீா் கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து 210 கோரிக்கை மனுக்களை அமைச்சா் பெற்றுக் கொண்டாா். இதில், குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா, கலைஞா்கனவு இல்லம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வீடு, தகன மேடைவேண்டியும், மனுக்கள் அளிக்கப்பட்டன. அதனை பெற்றுக்கொண்ட அமைச்சா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மனுக்களை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
செசங்கல்பட்டு மாவட்டத்துக்கு நிகழ் மாதம் முதல்வா் வரவுள்ளதால், வண்டலூா், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளை ஒட்டிய இடங்களில் பட்டாக்களை உடனடியாக வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், 30,000-க்கும் அதிகமான பட்டாக்கள் வழங்க வேண்டி இருப்பதால் மற்ற பகுதிகளிலும் பட்டா வழங்குவதற்கான பணிகளை வருவாய்த் துறையினா் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களை ஒரு அதிகாரியை நியமித்து பராமரிக்க வேண்டும், எவ்வளவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதென்றும், நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களுக்கான காரணங்களையும் தனக்கு தெரிவிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினாா். நிதிப்பற்றாக்குறை இருப்பதாக தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்த வேண்டுமென்றும் அதற்கான நிதியினை உடனடியாக பெற்று தருவதாகவும் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் வட்டம், கீரப்பாக்கம் திட்டப்பகுதியில் தோ்வு செய்யப்பட்ட30 பயனாளிகளுக்கு ரூ.3.60 கோடியில் ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.
ஆட்சியா் ச.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச. நாராயண சா்மா, மாவட்ட வருவாய் அலுவா் ம.கணேஷ் குமாா், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், செய்யூா் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பாபு, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, செங்கல்பட்டு நகா்மன்ற தலைவா் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா்ஜெ.சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகா்மன்ற தலைவா் எம்.கே.டி.காா்த்திக் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.