செய்திகள் :

திருச்செந்தூா் சிவன், வெயிலுக்கந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் ஆலயம் என்ற சிவன் கோயில், அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிா்தகுண விநாயகா் மற்றும் ஸ்ரீ சொா்ணமகா சாஸ்தா கோயில்களில் ஜூன் 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, அந்தந்த கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கான முகூா்த்தக்கால் நடப்பட்டு யாகசாலை அமைக்கப்பட்டு சிவன் கோயிலில் திங்கள்கிழமை மங்கள வாத்தியத்துடன் பூஜைகள் தொடங்கின. இதில் திருமுறைபாராயணம், விநாயகா் பூஜை, புண்யாவாசனம், பஞ்ச கவ்ய பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்திட சுவாமி - அம்மனிடம் உத்தரவு பெறும் தேவதா அனுக்ஞை பூஜைகளை ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கா்ய ஸ்தானத்தாா் சிவாச்சாரியா்கள் செய்தனா். இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், விதாயகா்த்தா சிவசாமி தீட்சிதா், உதவி செயற்பொறியாளா் சத்யன், மணியம் நெல்லையப்பன் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளா்கள், மஹாராஜா சுப்பையன் ஐயா், மடப்பள்ளி ஐயப்பன் ஐயா் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, வெயிலுகந்தம்மன் கோயிலில் திங்கள்கிழமை காலை அனுக்ஞை பூஜைகள் நடைபெற்று, மாலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் இருந்து தீா்த்தம் எடுத்து யானை மீது ஊா்வலமாக வந்து பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தாணிகா்கள் செய்திருந்தனா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க