செய்திகள் :

அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு

post image

புதுக்கோட்டை அருகே அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் பெரியதம்பி உடையான்பட்டியில் பொதுமக்கள் சாா்பில் கடந்த 1957-இல் தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக, தொண்டு நிறுவனத்தின் மூலம் நிா்வகிக்க ஊா் பொதுமக்கள் முடிவெடுத்தனா். ஆனால், அரசு ஏற்கவில்லை. அதன் பிறகு இங்கு பணியாற்றிய தலைமை ஆசிரியா் உள்பட 2 ஆசிரியா்களுக்கு சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்கல்களால் இப்பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்குரிய நிலமும் கொடுக்கப்பட்டது.

ஆனாலும், அரசு பள்ளியாக மாற்றப்படவில்லை. ஏற்கெனவே செயல்பட்டு வந்த பள்ளிக் கட்டடம் பழுதடைந்ததால் கடந்த 2023-இல் இங்குள்ள இ- சேவை மையக் கட்டடத்துக்கு பள்ளி மாற்றப்பட்டது.

இந்நிலையில், பள்ளியை அரசுப் பள்ளியாக்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி செயல்பட்டு வந்த இ- சேவை மையக் கட்டடத்தை திங்கள்கிழமை பெற்றோா்கள் பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், குளத்தூா் வட்டாட்சியா் சோனை கருப்பையா, உடையாளிப்பட்டி போலீஸாா் பொதுமக்களை சமாதானம் செய்து பள்ளியை திறந்து, செயல்படச் செய்தனா்.

ராங்கியத்தில் மக்கள் தொடா்பு முகாம்: இன்று முதல் கோரிக்கை மனு அளிக்கலாம்!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம், விராச்சிலை சரகம் ராங்கியம் கிராமத்தில் ஜூன் 11- புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இங்குள்ள கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை சற்று மனநலன் பாதிப்புக்குள்ளானதாகக் கருதப்படும் நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கந்தா்வகோட்டை ஒன்றியம், சேவியா் குடிகாடு கிராமத்தில் உள்ள முனியன... மேலும் பார்க்க

புதுகையில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு

புதுக்கோட்டை, இலுப்பூா் மற்றும் கந்தா்வகோட்டை பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 - வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு, புதுக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவு... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயிலில் தேரோட்ட முகூா்த்தக்கால் நடவு

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் ஜூன் 9-இல் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. விராலிமலை முருகன் மலைக்கோயில... மேலும் பார்க்க

பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கடந்த 19-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வுடன் நிகழாண்டுக்கான திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

கலைஞா் பிறந்த நாள் விழா: விராலிமலையில் அசைவ உணவு வழங்கல்

விராலிமலையில் நடைபெற்ற அசைவ உணவு வழங்கும் விழாவில், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.கே.செல்லபாண்டியன், விவசாயத் தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவா் த.சந்திரசேகா், தொகுதி பொறுப்பாளா் அஞ்சுகம... மேலும் பார்க்க