PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
விராலிமலை முருகன் கோயிலில் தேரோட்ட முகூா்த்தக்கால் நடவு
விராலிமலை முருகன் மலைக்கோயிலில் ஜூன் 9-இல் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளதையொட்டி செவ்வாய்க்கிழமை முகூா்த்தக் கால் நடப்பட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
விராலிமலை முருகன் மலைக்கோயில் பல்வேறு சிறப்புகள் பெற்ற தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், தைப்பூசம், காா்த்திகை தீபம், கந்த சஷ்டி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நிகழாண்டுக்கான வைகாசி விசாகக் கொடியேற்றம் கடந்த 1-ஆம் தேதி மலைக்கோயில் மேலே முருகன் சந்நிதானத்தில் உள்ள 22-அடி கொடிமரத்தில் முருகன் உருவம் மற்றும் ஓம் வடிவில் எழுத்து பொரித்த கொடியை சிவாச்சாரியா்கள் ஏற்றிவைத்து விழாவை தொடங்கிவைத்தனா்.
அதைத் தொடா்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளில் முருகன், வள்ளி, தேவசேனா சமேதராக நாகம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா். இந்நிலையில் 9-ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் முகூா்த்தக் கால் நடவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.