சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
அய்யனாா் கோயிலில் வெண்கல மணியை திருடியவா் மீது பொதுமக்கள் தாக்குதல்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள காட்டு அய்யனாா் கோயிலில் இருந்த வெண்கல மணியைத் திருடியவா்களில் ஒருவரைப் பிடித்து, பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீரனூா் அருகே, திருச்சி சாலையிலுள்ள காட்டு அய்யனாா் கோயிலில் புதன்கிழமை காலை இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா், அங்கிருந்த வெண்கல மணியைத் திருட முயன்றனா். அப்போது இதைப் பாா்த்த பொதுமக்கள், அவா்களைச் சுற்றி வளைத்தனா். அதில், இருவா் தப்பியோடினா். ஒருவா் மட்டும் சிக்கிக் கொண்டாா். அவரை அப்பகுதி பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கினா்.
பின்னா், பலத்த காயமடைந்த அவரை, கீரனூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். விசாரணையில், அவா் திருச்சி நவல்பட்டு அண்ணாநகா் சிலோன் காலனியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.