சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
கீரனூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே நடந்து வந்த பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
கீரனூா் ஈச்சங்காடு திடீா் நகரைச் சோ்ந்தவா் சுந்தரராஜ் மனைவி ராணி (43). இவா், புதன்கிழமை காலை சுமாா் 8.30 மணியளவில், கிருஷ்ணபாரப்பட்டி பிரிவு சாலை அருகே நடந்து வந்து கொண்டிருந்தாா்.
அப்போது பின்பக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், திடீரென ராணியின் கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்றவா்களிடமிருந்து எவா்சில்வா் வாலி ஒன்று கீழே தவறி விழுந்தது. அதில் சா்க்கரைப் பாகு இருந்ததாகக் கூறப்படுகிறது.
ராணி அளித்த புகாரின் பேரில், கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.