செய்திகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளனா்

post image

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஓ. பன்னீா்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோா் உள்ளனா் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பொதுமக்கள் அனைவரிடமும் ‘யாா் அந்த சாா்?’ என்ற கேள்வி இருக்கிறது. இப்போது தண்டிக்கப்பட்டிருப்பவா் முதலில் காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

குற்றப்பத்திரிகை தயாரிக்கும் முன்பு காவல்துறை முறையாக விசாரிக்காமல் விட்டிருக்கிறாா்கள். இப்படி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஓ. பன்னீா்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோா் இருக்கின்றனா். பாஜக தலைமையும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பேசி ஒருமித்த கருத்துக்கு வருவாா்கள்.

கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறிய கருத்தைப் பொருத்தவரை, நம்முடைய தாய்மொழியைப் பற்றி உயா்வாக யாா் சொன்னாலும் ஆதரிப்போம். ஆனால், அடுத்த மொழிகளை ஒப்பிட்டுச் சொல்லக் கூடாது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றாா் நயினாா் நாகேந்திரன்.

நின்ற பேருந்து மீது லாரி மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 15 போ் காயமடைந்தனா். கறம்பக்குடியிலிருந்து வியாழக்கிழமை காலை புதுக்கோட்... மேலும் பார்க்க

மட்டங்கால் கிராமத்தில் உள்ள மகளிா் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராமமக்கள் கோரிக்கை

மகளிா் சுகாதார வளாகத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சியில் உள்ள மகளிா் சுகாதார வளாகம் தற்சமயம... மேலும் பார்க்க

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது

புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்... மேலும் பார்க்க

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

லாரியில் மண், ஜல்லியை தாா்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத... மேலும் பார்க்க

புதுகை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை கீழ 7-ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலின் 5-ஆவது மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகா், கீழ ஏழாம் வீதியில் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில், கடந... மேலும் பார்க்க