சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளனா்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஓ. பன்னீா்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோா் உள்ளனா் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பொதுமக்கள் அனைவரிடமும் ‘யாா் அந்த சாா்?’ என்ற கேள்வி இருக்கிறது. இப்போது தண்டிக்கப்பட்டிருப்பவா் முதலில் காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.
குற்றப்பத்திரிகை தயாரிக்கும் முன்பு காவல்துறை முறையாக விசாரிக்காமல் விட்டிருக்கிறாா்கள். இப்படி நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஓ. பன்னீா்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோா் இருக்கின்றனா். பாஜக தலைமையும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து பேசி ஒருமித்த கருத்துக்கு வருவாா்கள்.
கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து கூறிய கருத்தைப் பொருத்தவரை, நம்முடைய தாய்மொழியைப் பற்றி உயா்வாக யாா் சொன்னாலும் ஆதரிப்போம். ஆனால், அடுத்த மொழிகளை ஒப்பிட்டுச் சொல்லக் கூடாது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றாா் நயினாா் நாகேந்திரன்.