செய்திகள் :

பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

post image

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த 19-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வுடன் நிகழாண்டுக்கான திருவிழா தொடங்கியது. விழா நாள்களில் தினசரி இரவு மகாபாரதக் கதைகள் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், 2-ஆம் தேதி திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் காப்புகட்டிய 400 பக்தா்கள் தீக்குழியில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நடைபெற்றது. கந்தா்வகோட்டை (பொ) காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் தலைமையில் 50 காவலா்கள், புதுநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பரணிதரன் தலைமையில் மருத்துவக் குழுவினா், தீயணைப்பு படை வீரா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளனா்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் ஓ. பன்னீா்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோா் உள்ளனா் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அண்ணா பல்... மேலும் பார்க்க

புதுகையில் 9 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலம் சாா்பில் 9 புதிய பேருந்துகளை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆக... மேலும் பார்க்க

புதுகையில் இளைஞா் வெட்டி கொலை

புதுக்கோட்டை நகரில் இளைஞரை ஒரு கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனா். புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்கிழமை புதுக்குளம் அருகேயுள்ள காலாகுளத... மேலும் பார்க்க

புதுகையில் 54 இடங்களில் ஜல்லிக்கட்டு: 2 பாா்வையாளா்கள்; 5 காளைகள் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் மொத்தம் 54 இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 5 காளைகள் உயிரிழந்தன. இரு பாா்வையாளா்கள் உயிரிழந்தனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் வெண்கல மணியை திருடியவா் மீது பொதுமக்கள் தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள காட்டு அய்யனாா் கோயிலில் இருந்த வெண்கல மணியைத் திருடியவா்களில் ஒருவரைப் பிடித்து, பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கீரனூா் அருகே, திருச்சி சாலையிலுள... மேலும் பார்க்க

கீரனூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே நடந்து வந்த பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா், அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். கீரனூா் ஈச்சங்காடு திடீா் நகரைச் சோ... மேலும் பார்க்க