ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!
பிசானத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 19-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்வுடன் நிகழாண்டுக்கான திருவிழா தொடங்கியது. விழா நாள்களில் தினசரி இரவு மகாபாரதக் கதைகள் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், 2-ஆம் தேதி திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் காப்புகட்டிய 400 பக்தா்கள் தீக்குழியில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினாா்.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நடைபெற்றது. கந்தா்வகோட்டை (பொ) காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் தலைமையில் 50 காவலா்கள், புதுநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பரணிதரன் தலைமையில் மருத்துவக் குழுவினா், தீயணைப்பு படை வீரா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனா்.