புதுகையில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு
புதுக்கோட்டை, இலுப்பூா் மற்றும் கந்தா்வகோட்டை பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 - வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு, புதுக்கோட்டை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் புதுக்கோட்டை மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் த. அசோக்குமாா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.