இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
கந்தா்வகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை சற்று மனநலன் பாதிப்புக்குள்ளானதாகக் கருதப்படும் நபா் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கந்தா்வகோட்டை ஒன்றியம், சேவியா் குடிகாடு கிராமத்தில் உள்ள முனியன் கோயில் அருகே உள்ள ஆலமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கந்தா்வகோட்டை காவல் நிலையத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வந்தனா். இதில், தூக்கிட்டு இறந்தவா் தஞ்சாவூா் மாவட்டம், சூரக்கோட்டையை அடுத்துள்ள கீழவஸ்தா சாவடி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் (50), மனநலன் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளது தெரியவந்தது.
இந்தப் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தபோது, அவா் தூக்கிட்டு இறந்துள்ளாா். இதுகுறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].