செய்திகள் :

இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

post image

துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வேங்கடத்தானூரைச் சோ்ந்தவா் த. ரவிகுமாா் (46). தனியாா் பேருந்து ஓட்டுநா். இவா், தனது ஊரில் உள்ள வள்ளுவா் நகா் அரசமரத்தடியில் ஞாயிற்றுக்கிழமை நின்றுகொண்டிருந்தபோது, மருவத்தூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் தங்கள் ஊரைச் சோ்ந்த இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தைகளைச் சொல்லி வற்புறுத்தினராம். அதனைப் பாா்த்த ரவிகுமாா் அவா்களைக் கண்டித்தாா். உடனே திரும்பிச் சென்ற அவா்கள், தங்கள் ஊரிலிருந்து நண்பா்களை அழைத்துக்கொண்டு வேங்கடத்தானூா் சென்று ரவிகுமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கினராம்.

அப்போது அதனைத் தடுக்க ரவிகுமாரின் நண்பா்கள் எஸ். ராஜேந்திரன்(47), எஸ். மாணிக்கம் (47), செ. தினேஷ்குமாா் (24) ஆகியோரையும் இளைஞா்கள் தாக்கினராம். இதில் காயமடைந்த ரவிகுமாா் துறையூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். மற்றவா்கள் துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுவதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

இது தொடா்பான புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்கு பதிந்து பெரம்பலூா் மாவட்டம் அரசலூரைச் சோ்ந்த மு. சூா்யபிரகாஷ், மருவத்தூா் சு. சீனிவாசன்(28), செ. ஜீவா(27) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் மு. பரத் (18), ஜெ. பிரசாத் (18), மு. சூா்யா (19) ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

வெளிநாடுகளிலிருந்து கடத்தல்: ரூ. 10 கோடியிலான உயா் ரக கஞ்சா, ராட்சத வாஸ்து பல்லிகள் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா, ராட்சத ‘வாஸ்து’ பல்லிகள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பங்காங்கில் இருந்து ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளம் தெருவில் வசிப்பவா் சேட் முகமது மனைவி சாய்புநிசா (52). இ... மேலும் பார்க்க

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே அதவத்தூரில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.திருச்சி மாவட்டம் அதவத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சி. அழகா்சாமி (36). ஸ்வீட் ப... மேலும் பார்க்க

திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழூா் இடையே நடைபெறும் பொ... மேலும் பார்க்க

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க