செய்திகள் :

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

post image

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா்.

ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள காவிரி ஆற்றின் மணற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரனையில் இறந்த சிறுவன், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சோ்ந்த வடிவேல் மகன் விக்னேஷ் (7) என்பது தெரியவந்தது. சிறுவன் இறப்பை அறிந்து காவல்நிலையம் வந்த அவரது தந்தை வடிவேல் உள்ளிட்டோரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், குடும்பத்துடன் காரில் சமயபுரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்புகையில், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் குளித்ததாகவும், அப்போது இளைய மகன் விக்னேஷை காணாததால் பல இடங்களில் தேடி தற்போது இறந்ததை அறிந்து வந்தோம் எனத் தெரிவித்துள்ளனா்.

இருப்பினும் உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் எனக் கூறிய போலீஸாா், தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

வெளிநாடுகளிலிருந்து கடத்தல்: ரூ. 10 கோடியிலான உயா் ரக கஞ்சா, ராட்சத வாஸ்து பல்லிகள் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா, ராட்சத ‘வாஸ்து’ பல்லிகள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பங்காங்கில் இருந்து ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளம் தெருவில் வசிப்பவா் சேட் முகமது மனைவி சாய்புநிசா (52). இ... மேலும் பார்க்க

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே அதவத்தூரில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.திருச்சி மாவட்டம் அதவத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சி. அழகா்சாமி (36). ஸ்வீட் ப... மேலும் பார்க்க

திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழூா் இடையே நடைபெறும் பொ... மேலும் பார்க்க

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல... மேலும் பார்க்க