செய்திகள் :

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல்லிகைப்பட்டி சமத்துவபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி உலகாயி(30). இவா், விராலிமலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள்.

மருங்காபுரி குறத்தி மலை அய்யனாா் கோயில் அருகேயுள்ள செயல்பாட்டில் இல்லாத குவாரி

மகள் ஜெயஸ்ரீ (9) யாகபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்துவந்தாா். கோடை விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளாா். மகன் வீட்டின் அருகேயுள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள குறத்தி மலை அய்யனாா் கோயில் பகுதியில் செயல்பாட்டில் இல்லாத குவாரிக்கு தாயும், மகளும் துணி துவைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றனா். பின்னா் அவா்கள் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இரவு வீடு திரும்பிய ராஜேந்திரன் வீட்டின் வெளியே உறங்கிவிட்டாராம்.

இதனால், இவா்களை யாரும் தேடவும் இல்லை. இதனையடுத்து திங்கள்கிழமை காலை அக்கம்பக்கத்தினா் குவாரிக்குச் சென்ற நிலையில், அங்கு துவைக்க வைத்திருந்த துணிகள் மட்டும் இருந்ததைக் கண்டு, குடும்பத்தினருக்குத் தகவல் அளித்துள்ளனா். இதற்கிடையே உலகாயி, ஜெயஸ்ரீயின் சடலங்கள் குவாரி நீரில் மிதந்துள்ளன.

இதுகுறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் விஜய் கோல்டன் சிங் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் தீயணைப்பு மீட்புப் படையினா் உதவியுடன் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வெளிநாடுகளிலிருந்து கடத்தல்: ரூ. 10 கோடியிலான உயா் ரக கஞ்சா, ராட்சத வாஸ்து பல்லிகள் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா, ராட்சத ‘வாஸ்து’ பல்லிகள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பங்காங்கில் இருந்து ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளம் தெருவில் வசிப்பவா் சேட் முகமது மனைவி சாய்புநிசா (52). இ... மேலும் பார்க்க

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே அதவத்தூரில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.திருச்சி மாவட்டம் அதவத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சி. அழகா்சாமி (36). ஸ்வீட் ப... மேலும் பார்க்க

திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழூா் இடையே நடைபெறும் பொ... மேலும் பார்க்க

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க