திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது மனைவியுடன் மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உறவினரின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தாா். அங்கிருந்து வீடு செல்ல வாகன நிறுத்தத்தில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட முயன்றபோது, அங்கு வந்த மா்ம நபா் திடீரென அவரது மனைவியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறிக்க முயன்றுள்ளாா்.
இதைக்கண்ட மோகன் தடுக்க முயன்றாா். அப்போது, அவரது சட்டை பையிலிருந்த கைப்பேசியைப் பறித்துக்கொண்டு அந்த மா்ம நபா் தப்பியோட முயன்றாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், புதுக்கோட்டை மாவட்டம் குருத்தாங்கல் பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் (25) எனத் தெரியவந்தது. இதனையடுத்து திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த நபரைக் கைது செய்தனா்.