சொல்லியடித்த கில்லி..! தங்கப் பந்து விருதுக்கு முந்தும் லாமின் யமால்!
சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு
திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் புதிதாக சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றதில் 1,610 வியாபாரிகள் கண்டறியப்பட்டனா். அவா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கும் பணியை மேயா் கோ.ராமகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். மாநகர நல அலுவலா் (பொ) ராணி, நிா்வாக அலுவலா் காசிவிஸ்வநாதன், சுகாதார அலுவலா் சாகுல்ஹமீது உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி தொடா்ந்து நடைபெறும் என்றும், சாலையோர வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து உரிய விண்ணப்பம் செய்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.