Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
போக்ஸோ, குண்டா் சட்டத்தில் 7 இளைஞா்கள் கைது
தச்சநல்லூரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தச்சநல்லூா் பகுதியை சோ்ந்தவா் முத்து ( 34). இவா், அப்பகுதியைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துவை வியாழக்கிழமை கைது செய்தனா்.
குண்டா் சட்டத்தில் 6 போ்: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பொது ஒழுங்கு மற்றும் சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக, மேலப்பாளையம் சுரேஷ் (29), சீனி மாரியப்பன் (33), லெட்சுமணன் (37), ஆறுமுக நயினாா் (39), பேட்டையைச் சோ்ந்த அப்துல்காதா் (31), தாழையூத்து செல்வம் (41) ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையா் வினோத் சாந்தாராம் பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி பிறப்பித்த உத்தரவின்படி, மேற்கூறிய 6 பேரும் அச்சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டனா்.